திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது என முதலில் செய்தி வெளியானது. ஆனால், அவர் குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் தடயவியல் போலீசார், ஸ்ரீதேவி மரணத்திற்கான தடயவியல் சான்றை அளித்துள்ளனர். அதில், ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்த குற்ற நோக்கமும் இல்லை. குளியல் தொட்டியில் தவறி விழுந்ததால் மூழ்கி இறந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
சுற்றுலா பயணியாக வந்த ஒருவர் திடீர் மரணம் அடைந்துவிட்டால் அவரது உடலை உரியவர்களிடம் ஒப்படைக்க துபாயில் பல நடைமுறைகள் இருக்கின்றன. மரணித்தவரின் மரணத்தில் சந்தேகம் இல்லை என தடயவியல் போலீசார் சான்று அளிக்க வேண்டும், பிரதே பரிசோதனை அறிக்க வர வேண்டும், பின்னர் அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது போன்ற பல விஷயங்கள் இருப்பதால் தான் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்று இரவுக்குள் அவரது உடல் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.