கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தமிழில், கேடி, நண்பன் என சில படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கு, ஹிந்தியில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ள அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான போட்டோ மறறும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதோடு, தனது பாய் பிரண்டான ஆஸ்திரேலியா போட்டோகிராபர் ஆண்ட்ரூவுடனும் ரகசிய திருமணம் செய்து விட்டதாக கிசுகிசுக்களிலும் சிக்கிக்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் மும்பையில் இலியானா மீடியாக்களை சந்தித்தபோது, பாய் பிரண்டுடனான ரகசிய திருமணம் குறித்த செய்தி பற்றி கேள்விகள் எழுப்பியுள்ளனர். அப்போது, அதற்கு மறுப்போ, இல்லை திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்தும்படியோ பதிலளிக்காத அவர், வழக்கம்போல் மலுப்பலாகவே பதில் கொடுத்துள்ளார்.
அதோடு, தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வரும் எனக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதிலும் கவர்ச்சி கதாநாயகியாக இலலாமல் நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த மாதிரியான கதைகளை தேடி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் இலியானா.