தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுமார் 8 வருடங்களுக்கு முன், அதாவது 2010-ல் பவன் கல்யான் ஜோடியாக 'புலி' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். அதன் பிறகு தமிழில் ஜெ.ஜெ.டிவி பாஸ்கரனுக்கு ஜோடியாக 'தலைவன்' என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் ஜோடியாக 'என்னமோ ஏதோ'படத்தில் நடித்தார் நிகிஷா பட்டேல்.தொடர்ந்து, 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்தும் அவரால் தமிழில் க்ளிக்காக முடியவில்லை. இந்நிலையில் இப்போது தெலுங்கு படங்களில் நடிக்க மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறார் நிகிஷா பட்டேல். அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் தெலுங்குப் படத்தில் நிகிஷா பட்டேலுக்கு அதிரடி ஆக்ஷன் கலந்த கேரக்டர்.
இந்த கேரக்டரில் நடிக்க முதலில் இறுதிச்சுற்று ரித்திகா சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. என்ன காரணத்தினாலோ ரித்திகா நடிக்க மறுத்துவிட்டதால், நிகிஷா பட்டேலை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப்படத்தில் நடிப்பது குறித்து, ''நான் நிஜத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. எனக்கு ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அந்த ஆசை இந்த படம் மூலம் நிறைவேறியுள்ளது.” என்று கூறியுள்ள நிகிஷா பட்டேல், தொடர்ந்து இதுபோன்ற ஆக்ஷன் படங்களில் நடிக்க விரும்புகிறாராம்.