தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் தயாராகி வரும் படம் மகாநதி. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடிக்க, சமந்தா ஒரு நிருபர் வேடத்தில் நடிக்கிறார். துல்கர் சல்மான் ஜெமினி வேடத்தில் நடிக்க, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட மேலும் சில பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் அப்படத்தில் பானுமதி வேடத்தில் நடிக்க அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், அது கெஸ்ட் ரோல் என்பதால் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார் அனுஷ்கா. அதோடு, வழக்கமான கதாநாயகியாக இனிமேல் நடிக்க மாட்டேன். வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வருகிறார் அனுஷ்கா.
அதோடு, கெளதம்மேனன் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஹீரோ படத்தில் அனுஷ்கா நடிப்பதாக கூறப்பட்டபோதும், அந்த படத்தை அவர் எப்போது எடுக்கிறார் என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பாகமதிக்குப்பிறகு இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகாமல் குழப்பத்தில் இருக்கிறார் அனுஷ்கா.