டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியா முழுதும், ஒரு பாடலில் கண் சிமிட்டல் மூலம் புகழ்பெற்ற புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியரை பற்றிய பேச்சாகவே இருந்தது. இவர் இடம்பெற்றிருந்த பாடல் வரிகள் குறித்த சர்ச்சையால் இவர் மீதும் சில மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு அவற்றை தடை செய்ததில் இன்னும் பரபரப்பாகி விட்டார் பிரியா வாரியர்..
இந்த நிலையில் நேற்று கொச்சியில் நடைபெற்ற இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியுடன் மோதிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை உற்சாகப்படுத்துவதற்காக பிரியாவாரியரும், அவருடன் போட்டியாக புருவம் உயர்த்தி பிரபலமான நடிகர் ரோஷனும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை காண கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் வந்திருந்தார். அவரை ஸ்டேடியத்தில் சந்தித்த பிரியா வாரியர், தங்களது கேரள அணியின் ஜெர்ஸியை அவரிடம் வழங்கி உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். அத்துடன் சச்சினை சந்தித்த அந்த அனுபவம் குறித்து ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.