தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவில் ஆதிவாசி இளைஞர் ஒருவர் அரிசி திருடினார் என சந்தேகத்தின் பேரால் பொதுமக்கள் மற்றும் சில விஷமிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். இல்லையில்லை கொல்லப்பட்டார். நாடெங்கிலும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா முதல்வர் பிணராயி விஜயன் உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நடிகர் மம்முட்டி, “தயவுசெய்து மதுவை ஆதிவாசி என அழைக்காதீர்கள். அவனை என் இளைய சகோதரன் என்று சொல்வேன். அவனை கும்பலாக கொன்றுவிட்டீர்கள்.. அவனும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கு உரிமையுள்ள மனிதன் தானே..
பசிக்காக திருடுபவனை நீங்கள் திருடன் என அழைக்க முடியாது. அது சமூகத்தின் அவலம். சட்டத்தை கையில் எடுத்துக்கொளும் சமூகம் எப்படி சக மனிதனுக்கு நியாயம் செய்யும்.. எங்களை மன்னித்துவிடு மது” என உருக்கமாக கூறியுள்ளார் மம்முட்டி.