தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏப்ரல் 4ம் தேதி திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு முன் நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முடிவு செய்துள்ளார்.
ஆலோசனை
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கிய நடிகர் கமல், தொடர்ந்து திருச்சியில் வரும் ஏப்ரல் 4ம் தேதி மாநாடு நடத்த போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அடுத்த கட்ட பயணம் மற்றும் கிராமங்கள் தத்தெடுப்பு தொடர்பாக ஆலோசனை நடந்தது.
ஏப்ரல் 4ல் திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்பது என்றும், முன்னதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களையும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ,புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்களை நேரடியாக சந்திப்பது என்றும் கமல் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.