டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியாவின் பொக்கிஷங்களில் ஒன்றான ராமாயணம் இதுவரை பல்வேறு திரைப்படங்களாக வெளிவந்துள்ளது. சமீபகாலமாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ராமாயணத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரமாண்ட திரைப்படமாக தயாரிக்க பலரும் முயற்சித்து வந்தனர். தற்போது அது கைகூடி வந்திருக்கிறது.
பிரபல தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், நமித் மல்கோத்ரா, மது மந்தீனா ஆகியோர் இணைந்து 500 கோடி ரூபாய் செலவில் ராமாயணத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். ராமாயண கதை பெரும்பாலும் உத்தர பிரதேசத்தில் நடப்பதால் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருவதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் அவினாஷ் குமாரும், தயாரிப்பாளர்களில் ஒருவரான மது மந்தீனாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
"ராமாயணம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாராகும். நவீன 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்படுகிறது. இது 3 பாகங்களாக வெளிவரும். நடிகர், நடிகைகள் தேர்வு விரைவில் நடக்க உள்ளது. இந்தியாவின் முக்கிய இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கிறார்" என்றார் தயாரிப்பாளர் மது மந்தீனா.
"உத்தரபிரதேச மாநிலத்தில் ராமாயணம் படப்பிடிப்பு நடத்த எல்லா விதமான உதவிகளையும் அரசு செய்யும்" என்றார் தலைமைச் செயலாளர் அவினாஷ்குமார்.