டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் மகேஷ்பாபுவும், அவரது மனைவி நம்ரதாவும் சமூக சேவைகளில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், கொடிய நோயினால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருவதோடு, கடந்த ஆண்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்தனர். அந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பராமரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தற்போது ஆந்திராவிலுள்ள புர்ரிப்பாளம் என்ற பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை சீரமைக்கும் பணிகளுக்காக ஒரு தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார் மகேஷ்பாபு. அந்த கட்டடம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனால் பிப்ரவரி 27-ந்தேதி நடக்கும் விழாவில் கலந்து கொண்டு, புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வகுப்பறைகளை திறந்து வைக்கிறார் மகேஷ்பாபு.