ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், சசிகுமார் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்பு செழியனின் கந்துவட்டி கொடுமை தான் என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தின் படியும், சசிகுமார் அளித்த புகாரின் பேரிலும் போலீசார் அன்பு செழியன் மீது வழக்கு தொடர்ந்தனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அன்பு செழியன் தலைமறைவானார்.
இதற்கிடையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை தடை செய்ய வேண்டும் என அன்பு செழியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அன்பு செழியன் மீதான வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் தலைமறைவான அன்பு செழியன் வெளியில் வந்தார். அமைச்சர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அன்பு செழியன் மீதான வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று சசிகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அதன் மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.