சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாகுபலி-2 படத்தை அடுத்து தனது புதிய படம் குறித்த தகவலை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் ராஜமவுலி. மல்டி ஹீரோ கதையில் உருவாகும் அந்த படத்தில் ஏற்கனவே தனது படங்களில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், இந்த படமும் பாகுபலி படத்தைப்போன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராவதால், சில தமிழ் நடிகர்கள் மற்றும் ஹிந்தி நடிகர்கள் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சமீபத்தில் தெலுங்கில் வெளியான தொலி பிரேமா படத்தைப்பார்த்த ராஜமவுலி, அந்த படத்தில் நாயகியாக நடித்திருந்த ராக்ஷி கண்ணாவின் நடிப்பையும், அவரது அழகையும் வெகுவாக புகழ்ந்து, பாராட்டி பேசியிருந்தார். அதையடுத்து ராஜமவுலியின் புதிய படத்தில் ராக்ஷி கண்ணாவும் நாயகியாக நடிப்பதாக டோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன. ஆனால் ராஜமவுலி இதுகுறித்து எந்த தகவலையும் இன்னும் வெளியிடவில்லை.