பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ரகுல் ப்ரீத்தி சிங், சாய் பல்லவி ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக பிரமாண்ட செட் போடப்படுகிறது. கதைப்படி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் சூர்யா என்பதால் அந்த ஊரின் முக்கிய தெருக்கள், கோவில்கள், கடைவீதிகள் சென்னையில் செட் போடப்பட்டு வருகிறது.
ரூ.3 கோடியில் உருவாகும் இந்த செட் உருவாக்கத்தில் கலை இயக்குனர் ஆர்.கே.விஜயமுருகன் தலைமையில் 220 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த செட்டில் 20 நாட்கள் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.