தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல மலையாள இயக்குனர் ஏம்.ஏ.நிஷாத், தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கி இருக்கும் படம் கேணி. பிராகிரண்ட் நேச்சர் பிலிம்ஸ் சார்பில் சஜீவ் மற்றும் ஆன் சஜீவ் தயாரித்துள்ளனர். நடிகைகள் ஜெயப்ரதா, ரேவதி, பார்வதி நம்பியார், அனுஹாசன், பார்த்திபன், நாசர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டு தண்ணீர் பிரச்னையை பற்றி பேசும் படமாக உருவாகி இருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் நிஷாத் கூறியதாவது:
தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது தண்ணீர் தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன் நிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம்.
காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் படம் . இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். மேக்கப் இல்லாமல், மிகவும் எளிமையாக நடித்திருக்கிறார் என்கிறார் நிஷாத்.