ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல மலையாள இயக்குனர் ஏம்.ஏ.நிஷாத், தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கி இருக்கும் படம் கேணி. பிராகிரண்ட் நேச்சர் பிலிம்ஸ் சார்பில் சஜீவ் மற்றும் ஆன் சஜீவ் தயாரித்துள்ளனர். நடிகைகள் ஜெயப்ரதா, ரேவதி, பார்வதி நம்பியார், அனுஹாசன், பார்த்திபன், நாசர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டு தண்ணீர் பிரச்னையை பற்றி பேசும் படமாக உருவாகி இருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் நிஷாத் கூறியதாவது:
தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது தண்ணீர் தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன் நிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம்.
காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் படம் . இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். மேக்கப் இல்லாமல், மிகவும் எளிமையாக நடித்திருக்கிறார் என்கிறார் நிஷாத்.