விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பிரபல மலையாள இயக்குனர் ஏம்.ஏ.நிஷாத், தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கி இருக்கும் படம் கேணி. பிராகிரண்ட் நேச்சர் பிலிம்ஸ் சார்பில் சஜீவ் மற்றும் ஆன் சஜீவ் தயாரித்துள்ளனர். நடிகைகள் ஜெயப்ரதா, ரேவதி, பார்வதி நம்பியார், அனுஹாசன், பார்த்திபன், நாசர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டு தண்ணீர் பிரச்னையை பற்றி பேசும் படமாக உருவாகி இருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் நிஷாத் கூறியதாவது:
தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது தண்ணீர் தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன் நிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம்.
காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் படம் . இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். மேக்கப் இல்லாமல், மிகவும் எளிமையாக நடித்திருக்கிறார் என்கிறார் நிஷாத்.