ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை துவக்கிவிட்டார். மதுரையில் நடந்த மாநாட்டில் கட்சியின் பெயரான, மக்கள் நீதி மய்யம் மற்றும் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
எனது கட்சி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் செயல்படும். இந்த சோற்று பருக்கையை தொட்டு பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப்பாருங்கள். அது சுடும் . சோற்று பருக்கையை தொட்டு பார்த்தால் ஊழலில் தோய்ந்த உங்களின் கைகள் சுட்டுவிடும். மக்கள் தான் தலைவர்கள். நான் மக்களின் கருவி மட்டுமே தலைவன் அல்ல என்று பேசினார்.
இந்நிலையில், கமல் தனது கட்சியின் பெயரை அறிவித்ததில் இருந்து டுவிட்டரில், நம்பர் 1 இடத்தை பிடித்து டிரண்ட் ஆனது மக்கள் நீதி மய்யம். காலையில் இருந்தே கமல் தொடர்பான விஷயங்கள் தான் அதிகளவில் டிரண்ட்டிங்கில் இருந்தது. மாலையில் கட்சியின் பெயர் அறிவித்த பின்னர் சமூக வலைதளங்களில் அனைத்திலும் கமலும், அவரின் மக்கள் நீதி மய்யம் அதிகம் பகிரப்பட்டன.