ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிம்பு, த்ரிஷா நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் படங்களில் முக்கிய படங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. அந்தப் படத்தில் நடித்த பிறகுதான் சிம்புவை பலருக்கும் பிடித்தது.
சிம்பு, த்ரிஷா இடையிலான கெமிஸ்ட்ரி, அருமையான காதல் காட்சிகள், வசனங்கள், மயக்க வைத்த ஏ.ஆர்.ரகுமான், தாமரை கூட்டணியின் பாடல்கள் என அன்றைய இளைஞர்கள் படத்தை அந்த அளவிற்குக் கொண்டாடினார்கள். அதன் பின் தமிழ் சினிமாவில் அந்த அளவிற்கு ரசிகர்களை ரசிக்க வைத்த காதல் படங்கள் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போது 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், படத்தின் நாயகனாக சிம்பு நடிக்கப் போவதில்லையாம். கௌதம் மேனனின் முதல் படமான 'மின்னலே' படத்தின் நாயகன் மாதவன் நடிக்கப் போகிறாராம். மாதவன் நடிக்கிறார் என்றால் அது நடுத்தர வயது காதல் படமாக அல்ல இருக்கும். முதல் பாகத்தைப் போல இளமை துள்ளல் இருக்காதே என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்யும். கௌதம் மேனன் அவர் எடுத்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை வெளியிட்ட பின்னர் தான் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. முதலில் அவர் இயக்கி வரும், அந்த இரண்டு படங்கள் எப்போது வரும் எனக் கேட்கிறீர்களா?, அது அவருக்கே தெரியாதே....!