மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் |
தாரை தப்பட்டை படத்தின் படுதோல்விக்குப் பிறகு பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், புதுமுகம் இவானா நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் நாச்சியார். படத்தில் நடித்துள்ள முக்கிய நட்சத்திரங்களின் நடிப்பையும், படத்தின் கதையையும் பெரும்பாலானவர்கள் பாராட்டி வருகிறார்கள். ஆனால், பாராட்டு கிடைக்கும் அளவிற்கு படத்திற்கு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட படத்தை மக்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்காமல் பாலா தோல்வியடைய வைத்துவிட்டாரே என்ற ஆதங்கம் திரையுலகத்தினரிடம் உள்ளது. அவரே தயாரிப்பாளர் என்பதால் அவர் இது பற்றி கவலைப்படப் போவதில்லை. மேலும், படத்தை அவர் வேறொருவருக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.
பொதுவாக, தான் இயக்கும் படங்கள் என்றாலே அது பற்றி முன்னரே எந்த ஒரு செய்தியையும் வரவிட மாட்டார் பாலா. பட வெளியீட்டிற்கு சில நாட்கள் முன்னர்தான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவருடைய படத்தைப் பற்றிப் பேசுவார், அப்போதும் அளந்துதான் பேசுவார். ஆனால், நாச்சியார் படம் பற்றி பாலா எந்த ஒரு பத்திரிகையாளரையும் சந்திக்கவில்லை. படத்தில் நடித்துள்ள ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் சந்தித்துப் பேசுவதற்கும் அவர் தடை போட்டுவிட்டார். இதனால், நாச்சியார் படம் குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை.
நன்றாக ஓட வேண்டிய நாச்சியார் படத்தை பாலாவே ஏன் இப்படி செய்தார் என சிலர் கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள்.