இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகத்தில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவருக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றபடி இருக்கிறார். விஜய் ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும், விக்ரம் ஜோடியாக ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்' படத்திலும், விஷால் ஜோடியாக லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
படப்பிடிப்புக்கு வருவதில் மிகவும் சரியாக இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அதற்காக அவரைப் பாராட்டுபவர்கள் வேறொரு விஷயத்திற்காக கடிந்து கொள்கிறார்கள். தினமும் அவர் மேக்கப் போட்டு முடிப்பதற்கு 2 மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொள்கிறாராம். காலையில் வந்ததும் கேரவனுக்குள் செல்பவர் இரண்டு மணி நேரம் கழித்து சுமார் 11 மணி அளவில்தான் கீழே இறங்கி வருகிறாராம். அவர் வருவதற்காக படக்குழுவினர் அனைவரும் காத்திருக்கிறார்களாம். தனக்காக பலரும் காத்திருப்பது கீர்த்திக்குத் தெரியாதா என்ன ?.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் முகத்தில் ஏன் அவ்வளவு மேக்கப் இருந்தது என்ற கேள்விக்கு இப்போதுதான் விடை கிடைத்துள்ளது.