வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
புருவத்தால் புயலை கிளப்பிய மலையாள நடிகை பிரியா வாரியர். மலையாளத்தில் தயாராகி வரும் ஓர் அடார் லவ் என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இடம்பெற்ற "மாணிக்ய மலராய..." என்ற பாடலில் புருவத்தை உயர்த்தியும், கண் சிமிட்டியும் இடம்பெற்ற காட்சிகளில் ஒரே நாளில் புகழின் உச்சியை அடைந்தார்.
இந்த திடீர் புகழால் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் கூடவே பிரச்னையும் வந்தது. இந்தப் பாடல் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக சில இஸ்லாமிய அமைப்புகள் ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளருடன் பிரியா வாரியர் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் பிரியா வாரியர். அந்த பாடல் வரிகள் திரிக்கப்பட்டு தவறான பொருள் கொள்ளப்பட்டு மலையாள மொழி பாடலுக்கு மலையாள மொழி அல்லாதவர்களால் வழக்கு தொடரப்படுகிறது. இது பாரம்பரியமாக கேரளாவின் மலபார் பிராந்தியத்தில் பாடப்படும் பாடலாகும். கேரளாவில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான முஸ்லீம்கள் 40 வருடங்களாக பாடி வரும் பாடல் இது என்றும், இந்த வழக்கில் தன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது. மகாராஷ்டிரா, ஐதராபாத்தில் தரப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.