மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் பேட் மேன். தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். படம் வெளியாக இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் அக்ஷ்ய் குமார். அவர் பேசுகையில், பேட் மேன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. என் மகன் கூட ரசித்தார். படத்தை பார்த்துவிட்டு என்னிடம் வந்து என் பின்னால் தட்டி, அப்பா குட் ஜாப் என்றான். பேட் மேன் படம் மட்டுமல்ல, எனது எல்லா படங்களையும் அவன் ரசிப்பான் என்று கூறியுள்ளார்.