'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் பேட் மேன். தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். படம் வெளியாக இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் அக்ஷ்ய் குமார். அவர் பேசுகையில், பேட் மேன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. என் மகன் கூட ரசித்தார். படத்தை பார்த்துவிட்டு என்னிடம் வந்து என் பின்னால் தட்டி, அப்பா குட் ஜாப் என்றான். பேட் மேன் படம் மட்டுமல்ல, எனது எல்லா படங்களையும் அவன் ரசிப்பான் என்று கூறியுள்ளார்.