சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'நாச்சியார். பாலாவின் முந்தைய படங்களைப்போல் ரத்தவாடை அதிகமான அடிக்கவில்லை என்றாலும் இந்தப் படத்திலும் ரத்தம் இல்லாமல் இல்லை.
இந்நிலையில் நாச்சியார் படத்தை புரமோட் பண்ண நடிகர் சிவகுமார் பாராட்டு பத்திரம் வாசித்தார். 'நாச்சியார்' படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இசை அமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் முதலானோரை குறிப்பிட்டு பாராட்டினார் நடிகர் சிவகுமார்.
இப்போது நடிகர் கார்த்தியும் 'நாச்சியார்' படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார். 'நாச்சியார்' ரொம்பவும் 'நீட்'டான, விறுவிறுப்பான, அழுத்தமான கதையை கொண்ட படம் மட்டுமல்ல, நல்ல பெர்பார்மென்ஸ் வெளிப்பட்ட படம்! பாசிட்டிவான கேரக்டர்களை கொண்ட பாலாவின் இந்த படத்தில் அண்ணி (ஜோதிகா), ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அழுத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! பல நல்ல விஷயங்கள் உள்ள 'நாச்சியாரை' ரொம்பவும் ரசித்தேன்' என்று கார்த்தி பாராட்டியிருக்கிறார்.
அடுத்து சூர்யாவின் பாராட்டுக்கடிதம் வரலாம்.