'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'நாச்சியார். பாலாவின் முந்தைய படங்களைப்போல் ரத்தவாடை அதிகமான அடிக்கவில்லை என்றாலும் இந்தப் படத்திலும் ரத்தம் இல்லாமல் இல்லை.
இந்நிலையில் நாச்சியார் படத்தை புரமோட் பண்ண நடிகர் சிவகுமார் பாராட்டு பத்திரம் வாசித்தார். 'நாச்சியார்' படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இசை அமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் முதலானோரை குறிப்பிட்டு பாராட்டினார் நடிகர் சிவகுமார்.
இப்போது நடிகர் கார்த்தியும் 'நாச்சியார்' படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார். 'நாச்சியார்' ரொம்பவும் 'நீட்'டான, விறுவிறுப்பான, அழுத்தமான கதையை கொண்ட படம் மட்டுமல்ல, நல்ல பெர்பார்மென்ஸ் வெளிப்பட்ட படம்! பாசிட்டிவான கேரக்டர்களை கொண்ட பாலாவின் இந்த படத்தில் அண்ணி (ஜோதிகா), ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அழுத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! பல நல்ல விஷயங்கள் உள்ள 'நாச்சியாரை' ரொம்பவும் ரசித்தேன்' என்று கார்த்தி பாராட்டியிருக்கிறார்.
அடுத்து சூர்யாவின் பாராட்டுக்கடிதம் வரலாம்.