டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'நாச்சியார். பாலாவின் முந்தைய படங்களைப்போல் ரத்தவாடை அதிகமான அடிக்கவில்லை என்றாலும் இந்தப் படத்திலும் ரத்தம் இல்லாமல் இல்லை.
இந்நிலையில் நாச்சியார் படத்தை புரமோட் பண்ண நடிகர் சிவகுமார் பாராட்டு பத்திரம் வாசித்தார். 'நாச்சியார்' படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இசை அமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் முதலானோரை குறிப்பிட்டு பாராட்டினார் நடிகர் சிவகுமார்.
இப்போது நடிகர் கார்த்தியும் 'நாச்சியார்' படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார். 'நாச்சியார்' ரொம்பவும் 'நீட்'டான, விறுவிறுப்பான, அழுத்தமான கதையை கொண்ட படம் மட்டுமல்ல, நல்ல பெர்பார்மென்ஸ் வெளிப்பட்ட படம்! பாசிட்டிவான கேரக்டர்களை கொண்ட பாலாவின் இந்த படத்தில் அண்ணி (ஜோதிகா), ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அழுத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! பல நல்ல விஷயங்கள் உள்ள 'நாச்சியாரை' ரொம்பவும் ரசித்தேன்' என்று கார்த்தி பாராட்டியிருக்கிறார்.
அடுத்து சூர்யாவின் பாராட்டுக்கடிதம் வரலாம்.