பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும், தொப்பி படங்களை இயக்கிய எழுத்தளார் யுரேகா தற்போது இயக்கி வரும் படம் காட்டுப்பய சார் இந்த காளி. மத்திய சென்னை படத்தின் ஹீரோ நடித்த ஜெய்வந்த் இதில் ஹீரோவாக நடித்து, தயாரிக்கவும் செய்கிறார். அவருக்கு ஜோடியாக மாடல் அழகி ஐரா நடிக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, சி.வி.குமார், அபிஷேக் நடிக்கிறார்கள். விஜய் ஷங்கர் இசை அமைக்கிறார். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை பற்றி இயக்குனர் யுரேகா கூறியதாவது:
20 ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை. யாரோ மர்ம நபர் தினமும் இரவில் வீட்டு முன்னால் நிற்கும் வாகனங்களுக்கு தீ வைத்து விட்டுச் செல்வார். அவர் யார்? ஏன் அப்படி செய்தார் என்பதை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அந்த மர்ம நபர் எதற்காக அப்படி செய்திருப்பார் என்பதை பற்றி ஆராயும் கதை தான் இது. அந்த சைக்கோ மனிதரை தேடும் போலீஸ் அதிகாரி தான் காளி. அந்த கேரக்டரில் தான் ஜெய்வந்த் நடித்துள்ளார் என்றார் யுரேகா.