ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசை அமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள பெரும்பாலான படங்களில் அவர் ஒரு பிளே பாயாகவே நடித்துள்ளார். குறிப்பாக திரிஷா இல்லேன்னா நயன்தாரா, புரூஸ்லீ படங்கள் அவருக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுத்தது.
சமீபத்தில் நாச்சியார் படம் பற்றி பாராட்டிய சிவகுமார் "இனி பிரகாஷ் துஷ்டபயல் கேரக்டரில் நடிக்க கூடாது" என்று கூறியிருந்தார். நாச்சியார் படத்தின் மூலம் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் பாலாவுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. பாலா இயக்கத்தில் நான் நடித்து வெளியாகியுள்ள நாச்சியார் படத்துக்கு நீங்கள் அளித்த அமோக ஆதரவிற்கும், வரவேற்புக்கும் மிக்க நன்றி. நாச்சியார் படம் விமர்சகர்களிடமும், மக்களிடமும், திரையுலக பிரமுகர்களிடம் எனக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளது.
எப்போதுமே பாலா சார் படத்தில் நடிப்பது என்பது பல நடிகர்களின் கனவு. நாச்சியார் படத்துக்காக என்னை அணுகிய போது கூட, இசையமைக்கத் தான் அழைக்கிறார் என்று தான் நினைத்தேன். நீ தான் நடிக்கிற என்று பாலா சொன்ன போது, நான் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது.
நாச்சியார் படத்தில் என் நடிப்பைப் பார்த்து அனைவருமே நல்ல நடிகன் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் பாலா மட்டுமே. அவர் காட்சியை எப்படி உள்வாங்கி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். என் நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பாலா. அவருக்கு என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாச்சியார் படத்தில் நடித்த அனைவருக்குமே திரையுலகில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பாலா. ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பிற்குச் செல்லும் போது மாணவர்களிடையே ஒரு புதிய உத்வேகம் கலந்த சந்தோஷம் இருக்கும். அதே சந்தோஷத்துடன் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறேன். நாச்சியார் படம் கொடுத்த நம்பிக்கையில் என் நடிப்பு பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்.
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.