அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, "நடித்து சொத்து சேர்த்துவிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களை நம்பாதீர்கள், அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காதீர்கள். அவர்கள் தோற்றால் அவர்களுக்கு நஷ்டம் இல்லை. ஜெயித்தால் உங்களுக்கு நஷ்டம்" என்று கூறியிருந்தார். இதற்கு பார்த்திபன் பதில் அளித்துள்ளார்.
ஈரோட்டில் நடந்த தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் ரஜினியும், கமலும் நேரில் சந்தித்து பேசி இருப்பது அவர்களின் ஆரோக்கிய அரசியலை காட்டுகிறது. அவர்களை சினிமாக்காரர்கள் என்று யாரும் எண்ணி ஒதுக்கி விடக்கூடாது.
அவர்கள் நடித்து சம்பாதித்து சேர்த்த பணம் எல்லாம் மக்கள் கொடுத்தது. அந்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள். அவர்களை நம்பலாம். அதற்காக இவருக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்லமாட்டேன். நான் யாருக்கு ஆதரவு எனவும் இப்போது சொல்ல மாட்டேன். தேர்தல் வரும் சமயத்தில் அதை தெரிவிப்பேன். என்றார் பார்த்திபன்.