பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னம் இயக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது. அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், மன்சூரலிகான், ஜெயசுதா, தியாகராஜன் முதலானோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் 'அங்கமாலி டைரீஸ்' மலையாள படத்தின் மூலம் புகழ் பெற்ற அப்பானி சரத்தும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லிங்குசாமி இயக்கி வரும் 'சண்டக்கோழி-2' படத்திலும் அப்பானி சரத் நடிக்கிறார்
செக்கச் சிவந்த வானம்' படத்தில் முதலில் மலையாள நடிகர் பஹத் பாசில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக பஹத் பாசில் இப்படத்திலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து பஹத் பாசிலுக்கு பதிலாக அருண் விஜய்யை கமிட் பண்ணினார் மணிரத்னம்.
அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக தற்போது தகவல் கசிய ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் தன்னை நெகட்டிவ்வாக காட்டியது பஹத் பாசிலுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததாகவும், அதனாலேயே வேலைக்காரன் படம் பற்றி அவர் அதிகம் பேசவில்லை என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் மணிரத்னம் படத்தில் மீண்டும் வில்லன் வேடம் என்றதும் மறுத்துவிட்டார் என்கின்றனர்.