டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
18 வயது கல்லூரி மாணவியான பிரியா வாரியர், மலையாளத்தில் தயாராகி வரும் ஓர் அடார் லவ் என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இடம்பெற்ற "மாணிக்ய மலராய..." என்ற பாடலில் புருவத்தை உயர்த்தியும், கண் சிமிட்டியும் இடம்பெற்ற காட்சிகளில் ஒரே நாளில் புகழின் உச்சியை அடைந்தார். இந்த திடீர் புகழால் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் கூடவே பிரச்னையும் வந்தது.
இந்தப் பாடல் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக சில இஸ்லாமிய அமைப்புகள் ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளருடன் பிரியா வாரியர் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பிரியா வாரியர் சார்பில் அவரது வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
ஓர் அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒரு வரிக்காக பல இடங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த பாடல் வரிகள் திரிக்கப்பட்டு தவறான பொருள் கொள்ளப்பட்டு மலையாள மொழி பாடலுக்கு மலையாள மொழி அல்லாதவர்களால் வழக்கு தொடரப்படுகிறது. இது பாரம்பரியமாக கேரளாவின் மலபார் பிராந்தியத்தில் பாடப்படும் பாடலாகும். இந்த பாடல் 1978-ம் ஆண்டு ஜப்பார் என்பவரால் கிராமிய பாடலாக எழுதப்பட்டு தலச்சேரி ரபீக் என்பரால் பாடப்பட்டது. கேரளாவில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான முஸ்லீம்கள் 40 வருடங்களாக பாடி வரும் பாடல் இது.
அந்த பாடல் எப்படி திடீரென மத உணர்வை புண்படுத்தும் பாடலாக மாற முடியும். இந்த பாடல் வரிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் (பிரியா வாரியர்) கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவி. அந்தப்படத்தில் வெறுமனே நடித்ததற்காக அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும். நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ததைப்போல பிரியா வாரியர் மீது தொடரப்பட்ட அத்தனை வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.