தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தில் நடிகர்களுக்கு திருப்புமுனையாக அமையக் கூடிய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரங்களாகவே அமையும். ஒரே குடும்பத்தில் மூன்று நடிகர்கள், ஒரு நடிகை இருக்கும் குடும்பம் நடிகர் சிவகுமாரின் குடும்பம்.
அவருடைய மூத்த மகனான சூர்யா, இளைய மகன் கார்த்தி, மூத்த மருமகள் ஜோதிகா ஆகியோர் இப்போது காவல் துறை கதாபாத்திரங்களை சிறப்பாக ஏற்று நடித்தவர்கள் என்ற பெருமையைப் பெற்றுவிட்டார்கள்.
சூர்யா முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்த காக்க காக்க படத்தை விட அவருக்கு போலீஸ் கதாபாத்திரத்தில் பெயர் வாங்கிக் கொடுத்த படம் சிங்கம். அதன் பின் 2, 3ம் பாகங்களிலும் ஓங்கி அடிச்சால் ஒன்றரை டன் வெயிட்ரா என கதறவிட்டார்.
கார்த்தி, போலீஸ் அதிகாரியாக நடித்த சிறுத்தை படம் அவருக்கு கம்பீரமான தனி அடையாளத்தை, ஹீரோயிசத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ரத்தினவேல் பாண்டியன் ஆக மிடுக்காக நடித்து பலரையும் மிரள வைத்தார்.
இப்போது ஜோதிகா, நாச்சியார் படத்தில் உதவி கமிஷனர் ஆக திமிர் பிடித்த பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். அதிலும் துணை கமிஷனரை போடி என அவர் சொல்லிவிட்டு செல்லும் காட்சியில் தியேட்டர்களில் கைதட்டல் பிளக்கிறது.
பெண்ணாக இருந்தாலும், சூர்யா, கார்த்தியை போலீஸ் நடிப்பில் ஜோதிகா ஓவர்டேக் செய்துவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள்.