இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பது என்றால் மலையாள சினிமா படைப்பாளிகளின் சாய்ஸாக இருப்பது நடிகர் ஜெயசூர்யா தான், வாய்பேசாத, காதுகேளாத, திக்குவாய் குறையுடைய, ஒரு கால் ஊனமாக என இப்படி பல கேரக்டர்களில் கதைக்காக தன்னை மாற்றிக்கொண்டு நடித்தவர்தான் ஜெயசூர்யா.
அந்தவகையில் தற்போது தந்து ஆஸ்தான இயக்குனரான ரஞ்சித் சங்கரின் டைரக்சனில் 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் போஸ்டர் வடிவமைப்பில் சானிடரி நாப்கின் மீது டைட்டில் இடம்பெற்று இருப்பதால் இது சமீபத்தில் வெளியான அக்சய்குமார் நடித்த 'பேடுமேன்' படத்தின் ரீமேக்கா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் இதை மறுத்துள்ள இயக்குனர் ரஞ்சித் சங்கர், இது முற்றிலும் வேறான கதை என்றும், இதில் புதிய ஜெயசூர்யாவை பார்ப்பீர்கள் என்றும் கூறியுள்ளார்.