பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பது என்றால் மலையாள சினிமா படைப்பாளிகளின் சாய்ஸாக இருப்பது நடிகர் ஜெயசூர்யா தான், வாய்பேசாத, காதுகேளாத, திக்குவாய் குறையுடைய, ஒரு கால் ஊனமாக என இப்படி பல கேரக்டர்களில் கதைக்காக தன்னை மாற்றிக்கொண்டு நடித்தவர்தான் ஜெயசூர்யா.
அந்தவகையில் தற்போது தந்து ஆஸ்தான இயக்குனரான ரஞ்சித் சங்கரின் டைரக்சனில் 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் போஸ்டர் வடிவமைப்பில் சானிடரி நாப்கின் மீது டைட்டில் இடம்பெற்று இருப்பதால் இது சமீபத்தில் வெளியான அக்சய்குமார் நடித்த 'பேடுமேன்' படத்தின் ரீமேக்கா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் இதை மறுத்துள்ள இயக்குனர் ரஞ்சித் சங்கர், இது முற்றிலும் வேறான கதை என்றும், இதில் புதிய ஜெயசூர்யாவை பார்ப்பீர்கள் என்றும் கூறியுள்ளார்.