டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகர்களில் ஆர்யா, விஷால் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். விஷால், நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டிய பிறகு, அங்குதான் அவரது திருமணத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அது போலவே அவருடைய நெருங்கிய நண்பரான ஆர்யாவும் நடிகர் சங்கத்தில்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பேசி வந்துள்ளார்.
இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு தனக்கு வேண்டிய மணப்பெண்ணை தேடுவதாகவும் அதனால் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என ஆர்யா டுவிட்டர் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அறிவிப்பு என்று நாம் முன்பே செய்தி வெளியிட்டோம். அந்த நிகழ்ச்சியின் பெயர் 'எங்க வீட்டு மாப்பிள்ளை'. இன்று ஆரம்பமாக உள்ள கலர்ஸ் டிவி தமிழில், நாளை முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ஆர்யாவுக்கு சிறந்த மணப்பெண்ணைத் தேடித் தருவதற்காக நடிகை சங்கீதா, ஆர்யாவுக்குத் துணையாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஆர்யாவை தங்கள் அழகு மூலமும், திறமை மூலம் கவர சில பெண்கள் முயற்சி செய்வார்கள். அவர்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து ஆர்யா திருமணம் செய்து கொள்வதுதான் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் கான்செப்ட்.
டிவி நிகழ்ச்சியில் மணப்பெண்ணைத் தேடி, அதில் தேர்வாக உள்ளவரை ஆர்யா உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா அல்லது இது வெறும் டிவி நிகழ்ச்சியாக மட்டுமே அமையப் போகிறதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.