ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 62வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னையின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்த படப்பிடிப்பு குழுவினர் அனுமதி பெற்றிருந்தனர். இதனால் நேற்று அங்கு விஜய் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
விஜய் கல்லூரி வளாகத்திற்கு வந்திருக்கும் செய்தி மாணவர்களிடையே பரவியதும். மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு வெளியேறி படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்று விட்டனர். இதனால் ஆசிரியர்களால் பாடம் நடத்த முடியவில்லை. இது தொடர்பாக ஆசிரியர்களும், மாணவர்களும் கல்லூரி முதல்வரிடம் புகார் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு குழுவினரை தொடர்பு கொண்ட கல்லூரி முதல்வர் "கல்லூரி நேரம் முடிந்ததும் படப்பிடிப்பு வைத்துக் கொள்ளுங்கள், இப்போது நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கிறது" என்று கூறினார். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பின்னர் கல்லூரி நேரம் முடிந்து மாணவர்கள் அனைவரும் வெளியேறிய பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. இனி பச்சையப்பன் கல்லூரியில் எந்த படப்பிடிப்பு நடத்தவும் அனுமதிக்க கூடாது என்று மாணவர்களும், ஆசிரியர்களும் கூறியதை முதல்வர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.