ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நட்சத்திர கிரிக்கெட் (சிசிஎல்) போன்று தற்போது நட்சத்திர பேட்மிட்டன் போட்டிகள் செலிபிரிட்டி பேட்மிட்டன் லீக் (சிபிஎல்) என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மலேசியாவில் நடந்த இந்த போட்டிகள் இந்த ஆண்டு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வருகிற 25ந் தேதி முதல் நடக்கிறது.
இதில் தமிழ் ராக்கர்ஸ், கேரளா ராயல்ஸ், டோலிவுட் தண்டர்ஸ், கர்நாடக வாரியர்ஸ் அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. இதில் தமிழ் ராக்கர்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் விஷ்ணு விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். துணை கேப்டனாக கிருஷ்ணா தேர்வாகி உள்ளார். நடிகர்கள் விக்ராந்த், கலையரசன், ஹரீஷ் கல்யாண், நடிகைகள் காயத்ரி, சுஜா வாருணி, ஜனனி அய்யர், மிஷா கோஷல் ஆகியோர் விளையாடுகிறார்கள். அணியின் தூதராக நடிகை ஹன்சிகாவும், மோட்டிவேட்டராக நடிகை வரலட்சுமியும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அணியின் உரிமையாளர் கோகுலம் பைனான்ஸ் பைஜுகோபாலன்.