பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் நெப்போலியன் சாயலில் சினிமாவுக்கு அறிமுகமானவர் தேசிங்குராஜா. கோவை மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த இவர் சினிமா வாய்ப்பு தேடி 10 வருடங்களுக்கு முன்பு சென்னை வந்தார். சிறுபட்ஜெட் படங்களில் போலீசாக நடித்த இவர் சிங்கம் 2 படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக வாணி ராணி சின்னத்திரை தொடரில் நடித்து வந்தார்.
தேசிங்குராஜா தனது நண்பர்களுடன் சபரிமலைக்கு சாமி தரிசனத்திற்காக விரதம் இருந்து சென்றார். நடைபயணமாக மலையேறிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்து விட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான பல்லடத்துக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 48 வயதான தேசிங்கு ராஜாவுக்கு கவிதா என்ற மனைவியும், லாவண்யா, சரண்யா என்ற இரண்டு மகளும் உள்ளனர்.