600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் படம் எடுத்தாலும் பரபரப்புதான், பேசினாலும் பரபரப்புதான். அவர் தற்போது காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் என்ற ஒரு படம் இயக்கி தயாரித்தார். இந்தப் படத்தில் பிரபல நீலப்பட நடிகை மியா மல்கோவா நடித்துள்ளார். இந்தப் படத்தை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
இந்தப் படம் பெண்களை இழிவுபடுத்துவதாக கூறி தெலுங்கானா மாநிலத்தில் பல பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த படம் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராம்கோபால் வர்மா பெண்களுக்கு எதிரான சில கருத்துக்களை கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெண்களின் போராட்டம் இன்னும் வலுவடைந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 40 காவல் நிலையங்களில் ராம்கோபால் வர்மா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ராம்கோபால் வர்மா மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ராம்கோபால் வர்மா போலீஸ் முன்பு ஆஜராகி தனது விளக்கத்தை தரவேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று ஐதராபாத் சென்டிரல் க்ரைம் போலீசார் முன்பு ராம்கோபால் வர்மா ஆஜரானார். அவரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடமிருந்த மொபைல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மீண்டும் வருகிற திங்கட்கிழமை (நாளை) ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். நாளை விசாரணை முடிவுக்கு பிறகு ராம்கோபால் வர்மாக கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.