'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை கஸ்தூரிக்கு பெரிதாக படங்கள் இல்லை. என்றபோதும் அவ்வப்போது அரசியல் மற்றும் நாட்டு நடப்பு சம்பந்தப்பட்ட விசயங்கள் குறித்து தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டு பரபரப்பு வளையத்திற்குள் இருந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக, ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து உறுதியான நிலைபாட்டை சொல்லாதபோது, இப்படித்தான் 25வருசமா சொல்றீங்க. கேட்டு கேட்டு சலிச்சுப்பேச்சு என்று சொல்லி ரஜினி ரசிகர்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளானார். அதன்பிறகு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினியுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தினார் கஸ்தூரி.
இந்த நிலையில், சமீபத்தில் கமல், காவி அரசியலாக இருந்தால் ரஜினியுடன் இணையமாட்டேன் என்று சொல்லியிருந்தார். அதையடுத்து, காவியோ, கருப்போ எதுவாக இருந்தாலும், பிரச்சினையில்லை. பச்சோந்திகளாகத்தான் இருக்கக்கூடாது என்று தனது டுவிட்டரில் கமெண்ட் கொடுத்திருந்தார் கஸ்தூரி.
இந்த நிலையில், காவிரி பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை அடுத்து தனது டுவிட்டரில் ஒரு கவிதை வெளியிட்டுள்ளார் கஸ்தூரி. அதில்,
கழுதை தேய்ந்து கட்டெறும்பாயிற்று
கட்டெறும்பும் தேய்ந்து குற்றுயிராயிற்று.
மண்டையை பிளக்கும் வெயிலில் உழுபவன்
தொண்டை நனைக்கும் நீர்க்கு அழுபவன்.
சண்டை போட்டாலும் சந்தியில் நின்றாலும்
கெண்டைக்கால் பற்றி கெஞ்சிக்கேட்டாலும்
அண்டை மாநிலத்தார் மனதில் நீரில்லை.
அண்டிப்பிழைக்கும் ஈனமினி தேவையில்லை.
ஆற்றில் உள்ளது தீர்ப்பில் வரவில்லை.
ஆனால் காற்றும் மழையும் கொடுக்கும்.
வேண்டும் வளத்தை அளிக்கும்.
ஆண்டவன் கொடுப்பதையேனும் காத்திடுவோம்.
கள்ளுக்கும் குடுவைக்கும் காவிரியை இழக்காமல்
மண்ணுக்கு ஆசைப்பட்டு பெண்ணை சீரழிக்காமல்
நீருயுர நெல்லுயர
நீதியுடன் நாம் நடப்போம்.
இவ்வாறு கூறியுள்ளார் கஸ்தூரி.