ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் |
கடந்த சில நாட்களாக இணையதளம் மற்றும் சோஷியல் மீடியாக்களின் ஹாட் டாபிக்காக இருப்பது மலையாள சினிமா பாடலான 'மாணிக்ய மலராய பூவி' பாடலும் அதில் புருவங்களை உயர்த்தி இளைஞர்களின் மனதை கிறங்கடித்த ப்ரியா வாரியரும் தான். எந்தளவுக்கு இந்தப்பாடலுக்கு புகழ் கிடைத்ததோ அந்த அளவுக்கு இந்தப்பாடல் குறித்த சர்ச்சைகளும் கிளம்பின.
இருந்தாலும் இந்தபாடலுக்கு கருத்து சுதந்திரம் என்கிற அடிப்படையில் தனது ஆதரவை தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பிணராயி விஜயன். ஆனால் முதல்வரின் இந்த செயலுக்கு மலையாள நடிகரும் இயக்குனருமான ஜாய் தாமஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் படக்குழுவினரின் கருத்து சுதந்திரத்தை மதிக்கும் நீங்கள், சமீபத்தில் கேரளாவில் காங்கிரஸ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட விவகாரத்தில் வாய்மூடி இருப்பது ஏன்..? ஒருவேளை குற்றவாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவு தருகிறீர்களோ” என கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார் ஜாய் தாமஸ்.