ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. சென்னை 28 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, பிரியாணி, வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்பட சில படங்களில் நடித்தார். விஜயலட்சுமியால் சினிமாவில் நினைத்த இடத்தை பிடிக்க முடியவில்லை,
இதனால் துணை இயக்குனர் பெரோஸை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். கணவனை இயக்குனராக்குவதற்காக பண்டிகை என்ற படத்தை தயாரித்தார். தயாரிப்பாளராகவும், குடும்பத் தலைவியாகவும் மாறிவிட்டதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். இப்போது சீரியலில் நடிக்கிறார் விஜயலட்சுமி.
விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நாயகி என்ற தொடரின் நாயகி விஜயலட்சுமி தான். ஒரு பிரபல தாதாவிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை. அந்த தாதாவிடமிருந்து குடும்பத்தை நாயகி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் தொடரின் திரைக்கதை. இனி சின்னத்திரையில் விஜயலட்சுமியை அடிக்கடி பார்க்கலாம்.