டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பத்மாவத் படத்தை தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இர்பான் கானுக்கு ஜோடியாக தீபிகா நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ராணி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில், ரவுடி கும்பல்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கிய கொள்ளை கூட்ட தலைவி சப்னா தீதீ வேடத்தில் தான் தீபிகா நடிக்க உள்ளாராம். இந்த படத்திற்காக தன்னை தயார்படுத்திக் வேலைகளில் தீபிகா ஏற்கனவே இறங்கி விட்டாராம். இப்படத்தின் சூட்டிங் வேலைகள் வரும் மார்ச் மாதம் மும்பையில் துவங்க உள்ளதாம்.
இப்படத்தில் கொள்ளைக் கூட்ட தலைவனாக இர்பான் கானின் மனைவியாக தீபிகா நடிக்க உள்ளாராம். இப்படத்தை விஷால் பரத்வாஜ் இயக்கி, தயாரிக்கிறார். அவருடன் இணைந்து கிர்அர்ஜ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாம்.