‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகை அமலாபால் டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார். அந்த வகையில், திருமணம் விவாகரத்துக்குப் பிறகும் கதாநாயகியாகவே நடித்து வரும் அமலாபால், கடந்த சில மாதங்களாக பரபரப்பு வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார்.
அதாவது, புதிய கார் வாங்கியதில் ஏற்பட்ட வரி பிரச்சினையில் சில மாதங்களாக பரபரப்பு செய்தியாகி வந்தார். அதையடுத்து தொழிலதிபர் ஒருவர் தன்னை ஆசைக்கு இணங்க அழைத்ததாக அவரை போலீசில் சிக்க வைத்து இன்னொரு பரபரப்பை உருவாக்கினார் அமலாபால்.
இந்த நிலையில், நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகள் தங்களது காதலர்களுடன் காதலர் தினத்தை கொண்டாடி அந்த போட்டோக்களை இணைய பக்கத்தில் வெளியிட்ட நிலையில், அமலாபாலும் காதலர் தினம் கொண்டாடிய ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடவில்லை. தனது வீட்டு செல்ல நாய்குட்டியுடன் கொண்டாடியிருக்கிறார்.