பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலா இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் மற்றும் புதுமுக நடிகை இவானா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் நாச்சியார். இப்படத்தின் டீசர் வெளியான சமயத்தில், ஜோதிகா பேசிய வசனம் ஒன்று சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் ஜோதிகா. படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக வெளியான மற்றொரு டீசரில், ஜோதிகா, "கோவிலாக இருந்தாலும், குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு எல்லாம் ஒன்று தான்" என்று கூறுகிறார்.
இந்த வசனம் இந்து ஆலயங்களை அவமதிக்கும் விதமாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. இந்த வசனத்தை உடனே நீக்க வேண்டும், இல்லையேல் நாச்சியார் படத்தை தடை செய்ய வேண்டும், பாலா, ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.