ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலா இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் மற்றும் புதுமுக நடிகை இவானா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் நாச்சியார். இப்படத்தின் டீசர் வெளியான சமயத்தில், ஜோதிகா பேசிய வசனம் ஒன்று சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் ஜோதிகா. படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக வெளியான மற்றொரு டீசரில், ஜோதிகா, "கோவிலாக இருந்தாலும், குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு எல்லாம் ஒன்று தான்" என்று கூறுகிறார்.
இந்த வசனம் இந்து ஆலயங்களை அவமதிக்கும் விதமாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. இந்த வசனத்தை உடனே நீக்க வேண்டும், இல்லையேல் நாச்சியார் படத்தை தடை செய்ய வேண்டும், பாலா, ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.