'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களம் காண உள்ள நிலையில் அதுதொடர்பான வேலைகளில் மும்முரமாய் இறங்கி உள்ளார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காவிரி தீர்ப்பு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தன் கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், "காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்". என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசியல் களம் காண உள்ள கமலும், தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.