பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் பிரபுதேவா. இவர் தற்போது சார்லி சாப்ளின் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் விஜய்யை வைத்து இயக்கிய போக்கிரி படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், பிரபுதேவா சமீபத்தில் அஜித்தை சந்தித்து, கதை ஒன்றையும் கூறியுள்ளார். இதனால், விஸ்வாசம் படத்தை அடுத்து, அஜித், பிரபுதேவா இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல், விஸ்வாசம் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்திருப்பதும் ஒரு ‛கமிட்மென்ட்'டை வைத்தே என்கின்றனர். அதாவது, நயன்தாரா தயாரிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அஜித் நாயகனாக நடிக்க வேண்டும் என்பதே அது. இவற்றில் எது நடக்கும் என்பது ஓரிரு மாதங்களில் தெரிந்து விடும்.