ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படும் வைர வியாபாரி நிரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அவரை போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிரவ் மோடியின் வைர நகை கடை விளம்பரத்தில் நடித்ததற்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டார் என்று அவர் மீது நடிகை பிரியங்கா சோப்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா, நிரவ் மோடி டைமண்ட் ஜூவல்லரியின் விளம்பர மாடலாக இருந்தார். இதற்காக அவருக்கு கோடி கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளது. நிரவ் மோடி மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, அவரை சி.பி.ஐ தேடிவரும் நிலையில் அவர் மீது பிரியங்கா சோப்ரா புகார் கூறியிருப்பதும், வழக்கு தொடர்ந்திருப்பதும் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.