பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இப்படத்தை தொடர்ந்து தற்போது நரகாசுரன் என்ற படத்தை இயக்கி உள்ளார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
இப்படம் ரிலீஸாகும் முன்னரே கார்த்திக்கின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு நாடக மேடை என பெயரிட்டுள்ளனர். நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் கார்த்திக்கே தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவு - சுஜித் சரங், இசை- ரோன் ஈத்தன் யோகன், எடிட்டிங் - ஸ்ரீஜித் சரங், கலை - சிவசங்கர், தயாரிப்பு நிர்வாகம் - மணிகண்டன் என்று தன் பரிவாரங்களுடன் களம் இறங்குகிறார் கார்த்திக் நரேன். யாரும் எதிர்பாராத யூகிக்க முடியாத நட்சத்திர கூட்டணியுடன் களமிறங்க உள்ளாராம் கார்த்திக். அதுப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.