ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ரிச்சா சத்தா. இவர், விரைவில் குறும்படம் ஒன்றை இயக்கி, இயக்குநராக களமிறங்க உள்ளார். இந்த குறும்படம் 2025-ம் ஆண்டில் நடக்கும் கதையில் இருக்கும். மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியும் இப்படம் இருக்குமாம்.
இதுகுறித்து ரிச்சா கூறுகையில், நான் ஏற்கனவே சில குறும்படங்களை தயாரித்துள்ளேன். இப்போது முதன்முறையாக இயக்க உள்ளேன். என் நண்பர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கினார். நிச்சயம் அதை திறம்பட செய்வேன் என்றார்.
இந்த குறும்படத்தில் அலி பாசல் ஆடார் மாலிங், சத்யஜித் டூபே ஆகியோர் நடிக்கின்றனர். நடிகை விசாகா சிங் தயாரிக்கிறார்.